கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் (Lord's) மைதானத்தில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20 உலக சாம்பியன்களாக முடிசூடியுள்ளனர்.இதன்படி, 7ஆவது முறையாகவும் டி20 உலகக் கிண்…

கிரிக்கெட்டின் தலைமையகம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க லோர்ட்ஸ் (Lord's) மைதானத்தில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகளால் தோற்கடித்து, அவுஸ்திரேலிய மகளிர் அணி இருபதுக்கு-20 உலக சாம்பியன்களாக முடிசூடியுள்ளனர்.இதன்படி, 7ஆவது முறையாகவும் டி20 உலகக் கிண்ணத்தை வென்றுள்ள அவர்கள், தங்களுக்கு சவாலளிக்க வேறு எந்தவொரு அணியும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளனர்.

நேற்று நிறைவடைந்த இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று, அவுஸ்திரேலியாவுக்கு ஓரளவு கடினமான இலக்கை நிர்ணயித்தது.

இருப்பினும், அந்த இலக்கை நோக்கிப் பயணித்த அவுஸ்திரேலியா, ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைக் கடுமையாகத் தாக்கி, போட்டியின் முழுமையான கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்தியது.

அதன்படி, அவர்கள் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில், போட்டியின் 18ஆவது ஓவரில் (17.1 ஓவர்கள்) தங்களது இலக்கை வெற்றிகரமாகக் கடந்து வெற்றியைப் பதிவு செய்தனர்.