இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை தொடர்பான மோசடிகளில் சிக்கி பண இழப்புகளைச் சந்திக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. விற்பனைக்குரிய பொருள் கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமற்ற நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்துவதைத்…

இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் கையடக்கத் தொலைபேசி விற்பனை தொடர்பான மோசடிகளில் சிக்கி பண இழப்புகளைச் சந்திக்க வேண்டாம் என இலங்கைக் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

விற்பனைக்குரிய பொருள் கைகளுக்குக் கிடைக்கும் வரை, அறிமுகமற்ற நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.தங்களது பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பாகும் எனவும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான மோசடிகளைத் தவிர்க்க, பொருள் கிடைத்த பின்னர் பணம் செலுத்தும் (Cash on Delivery) முறையை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.