அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவில் கைதான சந்தேகநபர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்று (04) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.இந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு போக…

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவில் கைதான சந்தேகநபர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று (04) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.இந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அக்குரெகொட பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் இந்த சந்தேகநபர் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் மாலைதீவில் கைதானமை குறிப்பிடத்தக்கது.