அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவானது நேற்று முன்தினம்(…
அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவானது நேற்று முன்தினம்(01.07.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.போதைப் பொருளுடன் கைதான நபர்
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை(30) திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் உள்ள குறித்த வியாபாரியின் வீட்டை பொலிசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.' இதன்போது அங்கு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 40 வயதுடைய ஒருவரை 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.இதனையடுத்து கைது செய்யப்பட்டவரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 15 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

