அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 நாட்களுக்கு முன்பு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேறவே அமெரிக்கா தற்போது முயன்று வருவதாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹாச…

அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 நாட்களுக்கு முன்பு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து எப்படியாவது வெளியேறவே அமெரிக்கா தற்போது முயன்று வருவதாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹாசன் அஹ்மதியான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர்ந்து, இரண்டாவது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்தியுள்ள எதிர்த்தாக்குதல்களைப் பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. கண்டனம் தெரிவிக்கும் வளைகுடா நாடுகள்

இந்த பிராந்திய பதற்றச் சூழல் தொடர்பில் பேராசிரியர் அஹ்மதியான் கருத்து தெரிவிக்கையில்,

அமெரிக்கா வேண்டுமென்றே இந்த மோதல்களைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் அமைதி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளக் காரணங்களைத் தேடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான தற்காலிக அமைதி ஒப்பந்தம் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பொலிஸார் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வளைகுடா நாடுகள் ஈரானின் இந்த நடவடிக்கைக்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

எவ்வாறாயினும், அமெரிக்கா ஜனாதிபதி நிர்வாகம் திட்டமிட்டே அமைதி உடன்படிக்கையை முறிக்க முற்படுவதாக ஈரான் தரப்பு வாதிடுவதால், வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்குமோ என்ற அச்சம் சர்வதேச சமூகத்திடையே எழுந்துள்ளது.