வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join மேல் மாகாணத்தில் உள்ள 22 டெங்கு அதிக அபாய வலயங்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஒரு வாரத்திற்கு செயல்பாட்டில் உள்ளது. தினந்தோறும் பதிவாகும் டெங்கு நோயாளிக…
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
மேல் மாகாணத்தில் உள்ள 22 டெங்கு அதிக அபாய வலயங்களை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஒரு வாரத்திற்கு செயல்பாட்டில் உள்ளது.
தினந்தோறும் பதிவாகும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 59,638 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்களில் 12,158பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், டெங்கு காய்ச்சலினால் இதுவரையில் 39 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 7500 பேர் மீது வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த விரைவான தகவல்களைப் பெறும் நோக்கில் தேசிய டெங்கு செயல்பாட்டு மையம் நிறுவப்பட்டது.
அதேநேரம், டெங்கு நுளம்பு பெருக்கு வகையிலுள்ள இடங்கள் குறித்து தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
அதன்படி, தங்கள் பகுதிகளில் நுளம்பு பெருகும் வகையிலுள்ள பகுதிகள் அவதானிக்கப்பட்டால், 0117 966 366 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தெரிவிக்க முடியும்.

