அநுராதபுரம் மாவட்டம், மிகிந்தலை பிரதேசத்தில் காட்டு யானையொன்று தாக்கியதில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.06.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மிகிந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த 41 வயதுடைய குடும்பஸ்தர், ந…
அநுராதபுரம் மாவட்டம், மிகிந்தலை பிரதேசத்தில் காட்டு யானையொன்று தாக்கியதில், இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27.06.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மிகிந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த 41 வயதுடைய குடும்பஸ்தர், நேற்று அதிகாலை தனது வழமையான நாளாந்தத் தேவ நிமித்தம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.ஊடுருவிய காட்டு யானைஇதன்போது, கிராமப் பகுதிக்குள் ஊடுருவியிருந்த காட்டு யானையொன்றுடன் அவர் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
இதனையடுத்து, சினம்கொண்ட காட்டு யானை அவரைத் துரத்தித் துரத்திப் பயங்கரமான முறையில் தாக்கியுள்ளது. யானையின் மிகக் கொடூரமான தாக்குதலுக்குள்ளான அவர், கடுமையான உடல் காயங்களுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து அறிந்த பொலிஸாரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து, உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

