சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான மருந்து மாத்திரைகளுடன் நபரொருவர் கற்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 30ஆம் திகதி கற்பிட்டி இப்புன்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசே…
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான மருந்து மாத்திரைகளுடன் நபரொருவர் கற்பிட்டி கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 30ஆம் திகதி கற்பிட்டி இப்புன்தீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த டிங்கி படகு ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான மருந்து மாத்திரைகள் படகில் இருந்து மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கற்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், டிங்கி படகு மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மருந்து மாத்திரைகள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

