2005 ஏப்ரல் 15 அன்று மட்டக்களப்பு எல்லையில் உள்ள கருணா குழுவின் முகாம் புலிகளால் தாக்கப்பட்டது. இதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் இருந்த இந்தியக் கடவுச்சீட்டுகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் நான்கு பே…
2005 ஏப்ரல் 15 அன்று மட்டக்களப்பு எல்லையில் உள்ள கருணா குழுவின் முகாம் புலிகளால் தாக்கப்பட்டது.
இதில் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் இருந்த இந்தியக் கடவுச்சீட்டுகள் மற்றும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர், இந்திய உளவுத்துறையான 'றோ' (RAW)-வின் கீழ் இயங்கும் ஈ.என்.டி.எல்.எப் (ENDLF) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF), 'றோ' அமைப்பால் உருவாக்கப்பட்டு, அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிய ஒரு குழுவாகும். 1980களில் இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட இவர்கள், மட்டக்களப்பு பகுதிகளில் விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டனர்.
இவர்களின் கட்சிச் சின்னமான மூன்று நட்சத்திரங்களைக் கொண்டு, மக்கள் இவர்களை 'த்ரீ ஸ்டார்' (Three Star) என்று அழைத்தனர்.
மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இவர்கள் நிகழ்த்திய சித்திரவதைகள் இன்றும் மக்கள் மத்தியில் அச்சத்துடன் நினைவு கூரப்படுகின்றன.
1989ல் இந்திய ராணுவம் வெளியேறியபோது, இந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 1600 பேர் இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தனர். 15 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் அவர்கள் கருணா குழுவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு பகுதியில் கருணா குழுவின் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னாலிருந்த அதிர்ச்சிகரமான அரசியல் உண்மைகளை ஆராய்கிறது உண்மைகள் நிகழ்ச்சி...

