கட்டார் கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கையினால் அந்நாட்டுப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கட்டாரைச் சேர்ந்த ஒருவர் பயணித்த படகு காணாமல் போனதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடைபெற்ற "ராணுவ நடவடிக்கைகள்" காரணமாகப் பாய்ந்த குண்டுச் சிதறல்களால் அவர் காயமடைந்து உயிரிழந்துள்ளதாகக் அந்நாட்ட…

கட்டார் கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கையினால் அந்நாட்டுப் பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கட்டாரைச் சேர்ந்த ஒருவர் பயணித்த படகு காணாமல் போனதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நடைபெற்ற "ராணுவ நடவடிக்கைகள்" காரணமாகப் பாய்ந்த குண்டுச் சிதறல்களால் அவர் காயமடைந்து உயிரிழந்துள்ளதாகக் அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்டார் உள்துறை அமைச்சு தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.காணாமல் போன படகைத் தேடும் பணியின் போது, அப்பகுதியில் நடந்த ராணுவ நடவடிக்கைகளின் விளைவாகப் பாய்ந்த குண்டுச் சிதறல்களால் காயமடைந்து கட்டார் குடிமகன் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் கடற்படைத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் காணாமல் போன அந்தப் படகைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விபத்தின் போது அந்தப் படகில் உயிரிழந்த நபருடன் மற்றொருவரும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்த மேலதிக விபரங்களை அதிகாரிகள் இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.