லெபனான் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் தங்களின் இறையாண்மையை மதிக்கும் வகையிலும், ஒருவருக்கொருவர் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற அடிப்படையிலும் பரஸ்பர "தலையிடாமை" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், அந்த நாட்டு பிரதமர் நவாஃப் சலாம் மற்றும் சி…

லெபனான் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் தங்களின் இறையாண்மையை மதிக்கும் வகையிலும், ஒருவருக்கொருவர் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற அடிப்படையிலும் பரஸ்பர "தலையிடாமை" ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில், அந்த நாட்டு பிரதமர் நவாஃப் சலாம் மற்றும் சிரிய வெளியுறவு அமைச்சர் ஆசாத் அல்-ஷைபானியை ஆகியோருக்கு இடையே இரு நாட்டு தூதுக்குழுக்களின் முன்னிலையில் இந்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தலையிடாமை ஒப்பந்தம் லெபனானின் தேசிய செய்தி முகவரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளின் சுதந்திரம், ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சமத்துவத்தை மதித்தல் ஆகிய கொள்கைகளுடன், ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் மற்றொரு நாடு தலையிடக் கூடாது என்ற முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை லெபனான் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் எதிர்கொண்டு வரும் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், இந்த இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.