வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் 5 பேர் மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில் மூழ்கியதாக…
வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மாணவர்கள் 5 பேர் மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில் மூழ்கியதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒரு மாணவர் மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் மூழ்கிய ஏனைய மாணவர்கள் அனைவரும் வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மிக மோசமான நிலையில் இருந்த மூன்று மாணவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர்கள் அங்கு உயிரிழந்துள்ளதாகப் பொலிசார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

