நாட்டிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் அளவில் தெளிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதிக்கான மேலதிக கட்டணம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெர…

நாட்டிற்குள் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் அளவில் தெளிவான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கான மேலதிக கட்டணம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இறக்குமதி நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்த காலப்பகுதியில், நாளொன்றுக்கு சராசரியாக 400 முதல் 450 வரையான இறக்குமதிப் பதிவுகள் பதியப்பட்டு வந்ததுடன், சில தினங்களில் அது 800 வரை உயர்ந்திருந்தது.புதிய மேலதிக கட்டணம்

எவ்வாறாயினும், புதிய மேலதிக கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின், இந்த தினசரிப் பதிவுகளின் எண்ணிக்கை தற்போது 300 முதல் 350 ஆகக் குறைவடைந்துள்ளது.

பிரதான வாகன முகவர்களினால் ஒரு இறக்குமதி பதிவின் கீழ் 50 முதல் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை ஒரே தடவையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட முடியும் என்பதால், பதிவுகளில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சியானது ஒட்டுமொத்த வாகன இறக்குமதி எண்ணிக்கையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கமைய, விதிக்கப்பட்ட மேலதிக கட்டணம் காரணமாக தற்போது வாகன இறக்குமதி அளவு கணிசமாகக் குறைந்துள்ளமை தெளிவாக நிரூபணமாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.