நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் இலங்கை அரசியல் தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கும் உயிரிழப்புக்களுக்கும் ஜனாதிபதி அநுர குமாரவே பொறுப்பு என எதிர்தரப்புக்கள் குற்றம் சாட்டி வருகின்ற…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையால் இலங்கை அரசியல் தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கும் உயிரிழப்புக்களுக்கும் ஜனாதிபதி அநுர குமாரவே பொறுப்பு என எதிர்தரப்புக்கள் குற்றம் சாட்டி வருகின்றன. அதேநேரம், ராஜபக்சக்களின் ஆதரவாளர்களும் இவ்விடயத்தை பயன்படுத்தி ஆளும் தரப்பு மீது விமர்சனங்களை முன்வைத்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், யாருமே எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்ட இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் அவர்கள் பல அரசியல் வியூகங்களை முன்வைக்கின்றனர். குறிப்பாக, இந்நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவர் காரணமாக இருக்கலாம் என ஒரு சந்தேகம் எழுவதாக சுட்டிக்காட்டுகின்றனர். இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,

