பாடநூல் விநியோகத்தை சீரமைக்க புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறைமை அறிமுகம் வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join பாடசாலை பாடப் புத்தகங்களின் கொள்முதல், களஞ்சிய மேலாண்மை, விநியோகம் மற்றும் இருப்புத் தரவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆக…

பாடநூல் விநியோகத்தை சீரமைக்க புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறைமை அறிமுகம்

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

பாடசாலை பாடப் புத்தகங்களின் கொள்முதல், களஞ்சிய மேலாண்மை, விநியோகம் மற்றும் இருப்புத் தரவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளை முறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சும், கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் இணைந்து பல புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகம் அறிக்கைகளையும், கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் தற்போதைய செயல்பாடுகளையும் பரிசீலிப்பதற்காக, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு கூடியபோது இந்தத் தகவல் வெளியாகியது.

இதற்கமைய, அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது கையிருப்பில் உள்ள பாடநூல்கள் மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய புத்தகங்கள்பற்றிய விபரங்களை 2024-ஆம் ஆண்டு முதல் நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்காக புதிய கணினி தரவுத்தள முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.