பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 18,000 க்கும் மேற்பட்ட அன்னதாச சாலைகள் (தன்சல்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் இதுவரையில் 18,412 தன்சல்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் பதிவு செய்…
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 18,000 க்கும் மேற்பட்ட அன்னதாச சாலைகள் (தன்சல்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம் இதுவரையில் 18,412 தன்சல்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார்.
இன்று(29.6.2026) மற்றும் நாளை(30.6.2026) நடத்தப்படவுள்ள இந்த தன்சல்கள் சுகாதார பரிசோதகர்கள் மூலம் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.பரிசோதனை பொசொன் வலயங்களைச் சுற்றியுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் தற்காலிக பொசன் வர்த்தக நிலையங்களும் இந்த வாரம் முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. அதற்காக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

