சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மொத்தக் கடன்தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிலான பெருந்தொகைப் பணத்தை பல்வேறு வழிகளில் கொள்ளையர்களிடம் பறிகொடுத்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்…

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மொத்தக் கடன்தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிலான பெருந்தொகைப் பணத்தை பல்வேறு வழிகளில் கொள்ளையர்களிடம் பறிகொடுத்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, போலி இறக்குமதிகள் என்ற போர்வையில் மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் 1 பில்லியன் டொலர்கள் அளவில் இருக்கும் என்பதை முதன்முறையாக வெளிப்படுத்தியிருந்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, 'இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்நியச் செலாவணி, பொருட்கள் இறக்குமதிக்கான முன்தொகை (Advance payments) செலுத்தல்களாகக் காண்பிக்கப்பட்டுள்ளன.அந்நியச் செலாவணிஎனினும், அதன் ஊடாக எந்தவொரு பொருளும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை' எனத் தெரிவித்திருந்தார். 2023ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், போலி இறக்குமதிகள் என்ற போர்வையில் வங்கிகள் ஊடாக மிகவும் தந்திரமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுமார் 1 பில்லியன் (100 கோடி) அமெரிக்க டொலர் பெறுமதியான அந்நியச் செலாவணி, சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து இலங்கைக்குக் கிடைத்த மொத்தக் கடன்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சர்வதேச வங்கி அமைப்புகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் தந்தி வழி பணப்பரிமாற்ற (Telegraphic Transfer – TT) முறையின் கீழ் இந்த பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் சந்தேக நபர்கள் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக ஜூன் 14ஆம் திகதி வெளியான சிங்கள வார இறுதி இதழொன்றில் ஒரு விசேட கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. ஏற்றுமதி என்ற போர்வையில் அந்நியச் செலாவணியை இவ்வாறு மோசடியாக வெளியேற்றிய சில கிரிப்டோ (Crypto) நிதி மோசடியாளர்கள் பற்றி அதில் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.மோசடியான முறை அந்த வெளிப்படுத்தலைத் தொடர்ந்தும், இதே முறையில் பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பிய மேலும் சில நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் போலி நிறுவனங்களைத் தொடங்கி, இந்த இறக்குமதி என்ற போர்வையின் கீழ் பணத்தை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளனர்.

இந்தப் பணக் கடத்தல் மிகவும் திட்டமிட்ட முறையில் நடந்துள்ளதாகவும், இடைத்தரகராகச் செயற்பட்ட வங்கிகள் மற்றும் வங்கி மேலாளர்களும் இதில் தொடர்புபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான போது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நீடிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் மூன்று ஆண்டுகளில் பெற்ற மொத்தக் கடன் தொகை 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இந்த காலப்பகுதியில், 1 பில்லியன் டொலருக்கு சமமான அந்நிய செலாவணி மோசடியான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதுடன், இது பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்தக் கடனில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும் (1/3) என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.