சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்களின்படி, அடுத்த மாதத்திற்குள் 2652 சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார மேலாண்மை உதவியாளர்கள், நுளம்புக் கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் சிறு வணிக மேலாளர்களுக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்…
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தல்களின்படி, அடுத்த மாதத்திற்குள் 2652 சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார மேலாண்மை உதவியாளர்கள், நுளம்புக் கட்டுப்பாட்டு உதவியாளர்கள் மற்றும் சிறு வணிக மேலாளர்களுக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இலவச சுகாதார அமைப்பின் தரத்தை மேம்படுத்துதல், மருத்துவமனை அமைப்பை மேலும் செயல்திறன் மிக்கதாக மாற்றுதல் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகளைத் தடையின்றிப் பராமரித்தல் ஆகிய நோக்கங்களுடன் இது முன்னெடுக்கப்படவுள்ளது. வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப
அதன்படி, மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நீண்ட காலத்திற்குப் பிறகு சுகாதார உதவியாளர்கள் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் மேல் மாகாணத்தில் சுகாதார உதவியாளர்களின் முதல் கட்டமாக 627 பேருக்கு நாளை (04) நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக 600 சுகாதார உதவியாளர்களுக்கு ஜூலை 18ஆம் திகதியும், மூன்றாம் கட்டமாக 762 சுகாதார உதவியாளர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் திகதியும் நியமனங்கள் செய்யப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 247 மாவட்ட சுகாதார மேலாண்மை உதவியாளர்களுக்கு ஜூலை 16 ஆம் திகதி நியமனங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

