முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று(01) உத்தரவிட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த மின்னணு சாதனங்களை ஆய்…
முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று(01) உத்தரவிட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த மின்னணு சாதனங்களை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சுரேஷ் சலேவின் மடிக்கணினி திறக்கப்பட்டால் பல தகவல்கள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்தோடு, சுரேஷ் சலேவின் பல்வேறு பட்ட இரகசிய தகவல்கள் அடங்கிய கோப்புக்கள், பல்வேறு பொருட்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமே உள்ளன.இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்.

