தாய்வான் மீதான சீனாவின் இராணுவ அச்சுறுத்தலை முறியடிக்கவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் தாய்வான் நாடு வான்வழி, கடல்வழி மற்றும் நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா விமானங்களை கொண்டு ஒரு 'களந்தேன்கூடு' போல மாற்றப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் தாய்வானுக்கான தூதுவர் ரேமண்ட் கிரீன்…

தாய்வான் மீதான சீனாவின் இராணுவ அச்சுறுத்தலை முறியடிக்கவும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும் தாய்வான் நாடு வான்வழி, கடல்வழி மற்றும் நீருக்கடியில் இயங்கும் ஆளில்லா விமானங்களை கொண்டு ஒரு 'களந்தேன்கூடு' போல மாற்றப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் தாய்வானுக்கான தூதுவர் ரேமண்ட் கிரீன் தெரிவித்துள்ளார்.

தாய்வானின் தைச்சுங் நகரில் நடைபெற்ற ட்ரோன் தொழில்துறை மாநாட்டில் வியாழக்கிழமை பேசிய அவர்,இராணுவ பலம் உக்ரைன் போரில் மிகக் குறைந்த இராணுவ பலம் கொண்ட தரப்பினருக்கு ட்ரோன்கள் எவ்வாறு மிகப்பெரிய சாதகமாக அமைந்தன என்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், நவீனப் போர்க்களத்தில் ட்ரோன்களின் பயன்பாடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகவும், ஜனநாயக நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பை பலப்படுத்த அமெரிக்கா தாய்வானுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப நாட்டின் தற்காப்புத் திறனை மேம்படுத்துவது 'காலத்துடன் நடக்கும் பந்தயம்' என்று தாய்வான் ஜனாதிபதி வில்லியம் லாய் சிங்-தே வலியுறுத்தியுள்ளார்.தாய்வான் அரசு

தாய்வான் அரசு, உளவு மற்றும் கடற்கரைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறிய ரக ட்ரோன்களுக்காக 210 பில்லியன் தாய்வான் டொலர் ($6.59 பில்லியன்) மதிப்பிலான புதிய பாதுகாப்புத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. அதேவேளையில், தாய்வானின் முக்கிய எதிர்க்கட்சியான குவோமின்டாங் (KMT), ட்ரோன் உற்பத்திக்காக 6 ஆண்டுகளில் 240 பில்லியன் தாய்வான் டொலர்களைச் செலவிடும் தனித்துவமான சட்ட வரைவு ஒன்றை முன்வைத்துள்ளது.

அமெரிக்காவுடனான தற்காப்பு ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள், ஈரான் மீதான போர்ச் சூழல் காரணமாக தற்காலிகமாக தாமதமாகி வரும் நிலையில், தாய்வான் தனது உள்நாட்டு ட்ரோன் கட்டமைப்பை தீவிரமாக பலப்படுத்தி வருகிறது.