செய்திகள் 29 October 2025 தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் கடமைகளைப் பொறுப்பேற்பு செய்திகள் 29 October 2025 தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட RWP RSP VSV USP ndu psc PhD MSc (DM) MSc (NSWS) PGDM, நேற்று முன்தினம் (அக்டோபர…

செய்திகள்

29 October 2025

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவர் கடமைகளைப் பொறுப்பேற்பு

செய்திகள்

29 October 2025

தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நளிந்த நியங்கொட RWP RSP VSV USP ndu psc PhD MSc (DM) MSc (NSWS) PGDM, நேற்று முன்தினம் (அக்டோபர் 27) பாதுகாப்புச் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா (ஓய்வு) அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, மேஜர் ஜெனரல் நியங்கொட இன்று (அக்டோபர் 28) ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை இராணுவத்தின் கவசப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நியங்கொட, இராணுவத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றிய மிகவும் திறமையான சிரேஷ்ட அதிகாரி ஆவார். தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கை முழுவதும், அவர் பல முக்கிய மற்றும் சவாலான நியமனங்களை வகித்துள்ளார், இவர் சிறந்த தலைமைத்துவத்தையும் கடமைக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய அதிகாரி ஆவார்.