வனாத்தவில்லு, மங்களபுர களப்பில் தெப்பமொன்று கவிழ்ந்ததில், பூ பறிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐவர் தெப்பமொன்றில் குறித்த களப்பின் ஊடாக பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் நீருக்குள…
வனாத்தவில்லு, மங்களபுர களப்பில் தெப்பமொன்று கவிழ்ந்ததில், பூ பறிக்கச் சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐவர் தெப்பமொன்றில் குறித்த களப்பின் ஊடாக பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் நீருக்குள் வீழ்ந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் காப்பாற்றப்பட்ட நிலையில், ஏனைய மாணவர்கள் வனாத்தவில்லு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆபத்தான நிலையில் இருந்த நான்கு மாணவர்கள், மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அங்கு உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

