முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை, உரிய தகுதிகள் இன்றி கடற்படையில் இணைத்துக்கொண்டு ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீத…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை, உரிய தகுதிகள் இன்றி கடற்படையில் இணைத்துக்கொண்டு ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபருக்கு, தலா 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளை வழங்குமாறும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்தும் நீதவான் உத்தரவிட்டார்.

சாதாரண தரப் பரீட்சையில் சிங்கள மொழிக்கான சித்தி (Credit) கூட பெறாத நிலையில் ராஜபக்ஷ என்ற சந்தேகநபர் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும், கடற்படையின் சிறந்த கெடட் அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டிய பிரித்தானிய அரச கடற்படைப் பயிற்சியை அவருக்கு வழங்கி, அரசாங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபாய் (6,284,217.61 ரூபாய்) நட்டத்தை ஏற்படுத்தி ஊழல் புரிந்தமை தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுகிறது.

விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 04 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.