வடமாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்றது.இதன்போது, வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

வடமாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதிகளுடன் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் நடைபெற்றது.இதன்போது, வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடினார்.அடுத்த கட்ட நடவடிக்கைகடற்றொழில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

சட்டவிரோத மீன்பிடி, இழுவைமடி தொழில், கரைவலை மீன்பிடி உள்ளிட்ட விடயங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.அங்கிருந்து பெறப்பட்ட திருத்தங்கள் மீளாய்வு செய்யப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதுடன், இறுதி அனுமதி கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

கடல் அட்டை பண்ணைகள் தொடர்பில் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கை – இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.சட்டவிரோத நடவடிக்கைஒளிப்பாய்ச்சு மீன்பிடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடலில் காணாமல் போகும் கடற்றொழிலாளர்கள் மற்றும் படகுகள் தொடர்பிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அவசரகால கடல் மீட்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அதிநவீன வசதிகளைக் கொண்ட இரண்டு மீட்புப் ரெஸ்கியூ (Rescue) படகுகள் இவ்வருடத்திற்குள் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் கடலில் அவசரநிலைகளுக்கு விரைவாக பதிலளித்து கடற்றொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.