நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலமாக முதற்கட்ட நிவாரணமாக குறித்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நீர்கொ…
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மூலமாக முதற்கட்ட நிவாரணமாக குறித்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறை உத்தியோகத்தர்களின் வாரிசுகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு குறித்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுடன் இழப்பீடு தொகை நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எட்டுப்பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் மறைவுக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான பதவி உயர்வின் அடிப்படையிலான ஓய்வூதியங்களை அவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்குவதற்கும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, எஸ்.டி. அபேவர்தன, பி.என். தரங்க, ஏ.டி. தரங்க, டி.டபிள்யூ. புஷ்பகுமார, ஆர்.ஆர். சஞ்சீவ, டி.ஆர். திலகசிறி மற்றும் எம்.ஜி. உபாலி ஆகிய சிறைக்காவலர்களும் நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்துள்ளனர்.
பணியில் இருந்தபோது கொல்லப்பட்ட மேற்குறித்த ஏழு சிறைக்காவலர்களும் மரணத்தின் பின்னர் சிறைச்சாலை சார்ஜென்ட் தரத்துக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஜெயிலர் எஸ்.எச். சந்திரவன்ச, இரண்டாம் வகுப்புப் பதவியிலிருந்து முதலாம் தர ஜெயிலர் நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இறந்த திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

