சீனாவைச் சேர்ந்தவர் ஜாவோவன். இவர் 2019-ஆம் ஆண்டு, தனது 3 வயது குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது கீழே விழுந்து, மூளைச் சாவால் (Brain dead) பாதிக்கப்பட்டார். அன்று முதல் கடந்த 7 ஆண்டுகளாக, அவரது மனைவி கணவனைக் கைவிடாமல் கவனித்துக் கொண்டார். மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அவருக்குத்…

சீனாவைச் சேர்ந்தவர் ஜாவோவன். இவர் 2019-ஆம் ஆண்டு, தனது 3 வயது குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது கீழே விழுந்து, மூளைச் சாவால் (Brain dead) பாதிக்கப்பட்டார்.

அன்று முதல் கடந்த 7 ஆண்டுகளாக, அவரது மனைவி கணவனைக் கைவிடாமல் கவனித்துக் கொண்டார். மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அவருக்குத் தொடர்ந்து மசாஜ் செய்ததோடு, அவரது கால் விரல்களைக் கடித்து நரம்புகளைத் தூண்டி வந்தார். மனைவியின் அந்த அளவற்ற அன்பும் நம்பிக்கையும் வீண்போகவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ஜாவோ தற்போது கண் விழித்து, தனது மனைவியிடம் முதல் வார்த்தையாக "I LOVE YOU" என்று கூறியுள்ளார்.

மனைவியின் இந்த அசாத்திய அன்பும், அர்ப்பணிப்பும் உலகெங்கிலும் உள்ள பலரது மனதை நெகிழ வைத்துள்ளது.