இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திற்கு கூட்டாகக் கொண்டு செல்லும் நோக்கில் பிரதான 6 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. புதிய அரசியலமைப்பு மாற்ற…

இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனித உரிமைப் பிரச்சினைகளை சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திற்கு கூட்டாகக் கொண்டு செல்லும் நோக்கில் பிரதான 6 தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. புதிய அரசியலமைப்பு மாற்றம், மாகாண சபை தேர்தல் தாமதம் மற்றும் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகள் ஆகிய மூன்று முக்கிய புள்ளிகளை மையமாக வைத்தே இந்த கூட்டணி உருவாகியுள்ளது. இது ஒரு இனவாதக் கூட்டணி அல்ல, மாறாக உரிமைகளுக்கான பொதுவான தளம் என இக்கட்சிகள் பிரகடனப்படுத்தியுள்ளன.இந்நிலையில், இந்த கூட்டணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த புதிய தமிழ் கூட்டணியின் உருவாக்கம் குறித்து தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களிலும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,