தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சேவை செய்யும் இலங்கை ஆசிரியர் சேவை அதிகாரிகளுக்கான இரண்டாம் திறமைக்காண் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 2026 இல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்களைத் திணைக்களம் கோரியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜூலை 17 ஆம் திகதி வெளி…
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சேவை செய்யும் இலங்கை ஆசிரியர் சேவை அதிகாரிகளுக்கான இரண்டாம் திறமைக்காண் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 2026 இல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விண்ணப்பங்களைத் திணைக்களம் கோரியுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜூலை 17 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதுடன், பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஊடாக ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 10 வரை இணையவழி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
கல்விமானி (B.Ed.) பட்டத்தின் அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சேவை தரம் 2-II க்கு நேரடியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பத்தில் தரம் 3 க்கு நியமிக்கப்பட்டு பின்னர் தரம் 2-II க்கு பதவி உயர்த்தப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தரம் 2-II இல் நான்கு வருட சேவைக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர் இந்த இரண்டாம் திறமைக்காண் பரிட்சையை நிறைவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதலாக, 2025 ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் இரண்டாம் திறமைக்காண் பரீட்சையை நிறைவு செய்யாத போதிலும், அந்த நிபந்தனையை நிறைவேற்றுவதற்கு உட்பட்டு தரம் 2-I க்கு பதவி உயர்த்தப்பட்ட ஆசிரியர்கள், இலங்கை ஆசிரியர் சேவை தரம் 1 இற்கு மேலதிக பதவி உயர்வைப் பெறுவதற்குத் தகுதி பெற இத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இத்தேர்வுக்கான சுய கற்றல் தொகுதிகளுக்கான பாடத்திட்டம் கல்வி அமைச்சின் இ-தக்சலாவ (e-Thaksalawa) இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன்னர், இ-தக்சலாவ தளத்தில் கிடைக்கும் கற்றல் பொருட்களைப் பயன்படுத்தி சுய கற்றல் மூலம் தேர்வுக்குத் தயாராகுமாறு விண்ணப்பதாரர்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

