செய்திகள் 01 December 2025 அனர்த்த நிலையை எதிர்கொள்ளும் போது நாட்டின் சுகாதார சேவைகளுக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன செய்திகள் 01 December 2025 அவசர அனர்த்த முகாமைத்துவம் குறித்த நிபுணர்கள் குழு, இன்று இரவு ஜப்பானில் இருந்து இலங்கைக்கு ஜப்பான் தூதரகம் மற்றும் JICA இன் பிரதிநித…
செய்திகள்
01 December 2025
அனர்த்த நிலையை எதிர்கொள்ளும் போது நாட்டின் சுகாதார சேவைகளுக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன
செய்திகள்
01 December 2025
அவசர அனர்த்த முகாமைத்துவம் குறித்த நிபுணர்கள் குழு, இன்று இரவு ஜப்பானில் இருந்து இலங்கைக்கு ஜப்பான் தூதரகம் மற்றும் JICA இன் பிரதிநிதிகள் குழு இன்று (30) காலை சுகாதார அமைச்சில் நிறுவப்பட்ட 24 மணி நேர தேசிய சுகாதார பேரிடர் மீட்பு மையத்தைப் பார்வையிட்டு, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் மற்றும் மையத்தின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டது. அவசரகால பேரிடரை எதிர்கொள்ளும் போது சுகாதார சேவைகள் உட்பட மற்ற அனைத்து துறைகளுக்கும் உதவி வழங்குவதற்கான தேவைகளை அடையாளம் காண்பது, பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது வழங்கப்பட வேண்டிய நிவாரணப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வது மற்றும் குறிப்பாக சுகாதாரத் துறையில் ஏற்படும் பேரிடர்கள் குறித்து விசாரிப்பது ஆகியவை தூதுக்குழுவின் வருகையின் முதன்மை நோக்கமாகும்.
