மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை (09) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகளின் தரவுகள், வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்ப…
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை (09) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகளின் தரவுகள், வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.திறந்த வெளியில் தொழில் புரிவோர் அடிக்கடி போதியளவு நீரைப் பருக வேண்டும்.நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும்.
வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.
வெயிலில் அதிக சிரமத்தைக் கொடுக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.
வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது மென்மையான நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது
போன்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வெப்பநிலை அதிகரிப்பின் போது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

