அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்…

அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக பதுளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அடிக்கடி காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகி வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமின்றி, அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் அதிக வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகக்கூடும் என வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திம பாலமகும்புர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், நக்கிள்ஸ் காட்டின் ஹுன்னஸ்கிரிய பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பரவியிருந்த தீ, தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளைப் பாதித்து வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் தற்போது இலங்கையின் வானிலையிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய முன்னறிவிப்புகளின்படி, தற்போது பலவீனமாக உள்ள இந்த ‘எல் நினோ’ நிலைமையானது, எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் 80 சதவீதத்திற்கு மேல் தீவிரமடையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.