சீன அரச நிறுவனமான சினோபெக் நிறுவனம் முன்மொழிந்த 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான முதலீடு விவகாரம் இலங்கை அரசாங்கத்தின் இழுத்தடிப்புகள் காரணமாக தொடர்ந்தும் பிற்போடப்பட்டுள்ளது. தற்போதைக்கு கிடைத்துள்ள தகவல்களின் ப…
சீன அரச நிறுவனமான சினோபெக் நிறுவனம் முன்மொழிந்த 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான முதலீடு விவகாரம் இலங்கை அரசாங்கத்தின் இழுத்தடிப்புகள் காரணமாக தொடர்ந்தும் பிற்போடப்பட்டுள்ளது.
தற்போதைக்கு கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், சீன அரச நிறுவனமான சினோபெக் நிறுவனம் முன்மொழிந்த 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான முதலீடு குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும், திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு 2023 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆரம்ப அனுமதியைப் பெற்றது.இலங்கையின் மிகப்பெரிய நேரடி வெளிநாட்டு முதலீடாக கருதப்படும் இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2024 செப்டம்பரில் பதவியேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2025 ஜனவரியில் மேற்கொண்ட சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்டது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு 200,000 பீப்பாய் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் அதற்கு இருக்கும்.கோரிக்கை
ஆரம்ப ஒப்பந்தத்தின்படி, சுத்திகரிக்கப்பட்ட உற்பத்தியில் 20 சதவீதத்தை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யவும், மீதமுள்ளவற்றை ஏற்றுமதி செய்யவும் இலங்கை ஒப்புக்கொண்டது.'எனினும், உள்நாட்டு சந்தைக்கு மேலும் அதிக அணுகலைப் பெறும் நோக்குடன், சம்பந்தப்பட்ட நிறுவனம் ஆரம்ப ஒப்பந்தத்தில் திருத்தங்களைச் சேர்க்குமாறு தற்போது கோரிக்கை விடுத்துள்ளது.எவ்வாறாயினும், திட்டத்தின் நிபந்தனைகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாததால், இந்த திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை என அரசாங்க வட்டாரங்களிலிருந்து உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

