ஜனாதிபது அனுர அரசாங்கம், முன்னெடுத்து வரும் விசாரணையின் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்க்களை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகாள் க்ருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது. யாரும் எதிர்பாராத…
ஜனாதிபது அனுர அரசாங்கம், முன்னெடுத்து வரும் விசாரணையின் முக்கிய புள்ளிகளின் மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்க்களை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகாள் க்ருத்து வெளியிட்டுள்ளனர்.
இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது.
யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையின் 35 வது போலீஸ் மா அதிபராக (IGP) பணியாற்றிய சிடி. விக்ரமரத்ன நேற்றையதினம் (17) அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அடுத்தடுத்து ராஜபக்சர்களுக்கு நெருக்கமானவர்களின் மரணங்கள்
கபில சந்திரசேனவை தொடர்ந்து முன்னாள் IGP சிடி.விக்ரமரத்ன மரணங்க்கள் பெருத்த சந்தேகத்தினை எழுப்பியுள்ளது.
நிழல் அரசு பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கும் இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற மற்றும் போலீஸ் விசாரணைகளை உற்றுநோக்குபவர்களுக்கும் இந்த மரணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எளிதில் புரியும் என அவதானிகாள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ராஜபக்ச குடும்பத்திற்கு குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் மிகவும் விசுவாசமான ஒரு அதிகாரியாகவே செயல்பட்டவர் உயிரிழந்த IGP சிடி.விக்ரமரத்ன.கடந்த 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ஆட்சி அதிகாரத்தை பிடித்து ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் போலீஸ் மா அதிபர் பதவிக்கு இவரது பெயரை அவரே பரிந்துரை செய்து நியமித்தார். அதுமட்டுமன்றி இவரது பதவிக்காலத்தில் கோத்தாபாயவால் நான்கு முறைக்கும் மேலாக இவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் அரசுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டங்களை அடக்கவும் ராஜபக்சக்களின் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடியவர்களை அடித்துத் துன்புறுத்தவுமே இந்த நீடிப்புகள் வழங்கப்பட்டதாக ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் அப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து மிகத் தீவிரமாக விசாரித்த CID பணிப்பாளர் ஷானி அபயசேகர விக்ரமரத்னவின் பரிந்துரையின் பேரிலேயே பதவி இறக்கம் செய்யப்பட்டு பின்னாளில் கைதும் செய்யப்பட்டார்.
மேலும் ஈஸ்டர் பயங்கரம் குறித்து விசாரித்த 20 க்கும் மேற்பட்ட திறமையான CID அதிகாரிகள் விசாரணைப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டதுடன் 700 க்கும் அதிகமான போலீஸ் மற்றும் CID அதிகாரிகளுக்குப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.
அதேவேளை ஈசடர் தின பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஸாரா ஜெஸ்மினின் சர்ச்சைக்குரிய மூன்றாவது டீ என் ஏ பரிசோதனையின் ரிப்போர்ட்டை எடுக்க சுரேஷ் சலேயுடன் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றவர் முன்னாள் IGP சிடி.விக்ரமரத்ன.
கடந்த மே மாதமளவில் ராஜபக்சக்களின் ஊழல் சாம்ராஜ்யத்தின் முக்கிய புள்ளியாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் பிரதான குற்றவாளியாகவும் பார்க்கப்பட்ட கபில சந்திரசேனவும் இதேபோன்று மர்மமான முறையில் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் மரணமடைந்திருந்தார்.
இந் நிலையில் கபில சந்திரசேனவை தொடர்ந்து சிடி. விக்ரமரத்ன மர்ம மரணங்கள் பலத்த சந்தேகங்களை விதைக்கிறது

