வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்த, இலங்கையின் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகக் கருதப்பட்ட புஞ்சகே கலுமேனிக்கே தனது 114ஆவது வயதில் காலமானார். 1912ஆம் ஆண்டு ஜூலை 4ஆம…
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
அனுராதபுரம் மாவட்டத்தின் சங்கிலி கனதராவ பகுதியைச் சேர்ந்த, இலங்கையின் மிகவும் வயதான பெண்களில் ஒருவராகக் கருதப்பட்ட புஞ்சகே கலுமேனிக்கே தனது 114ஆவது வயதில் காலமானார்.
1912ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் திகதி பிறந்த அவர், இந்த ஆண்டில் தனது 114ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்.
பிறந்தநாளைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஞ்சகே கலுமேனிக்கே தனது வாழ்நாளில் 12 பிள்ளைகளுக்குத் தாயாக இருந்ததுடன், அவரது குடும்பப் பரம்பரையில் 325 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவு, நீண்ட ஆயுளும் பெரும் குடும்பப் பாரம்பரியமும் கொண்ட ஒரு தலைமுறையின் நிறைவாகக் கருதப்படுகிறது.

