மியான்மாரில் நிலவும் கடுமையான ராணுவ அடக்குமுறை மற்றும் இனப்படுகொலை அச்சுறுத்தல்களால், அங்கிருந்து தப்பித்து வரும் ரோஹிங்கியா அகதிகள், பாதுகாப்பற்ற படகுகள் மூலம் வங்கதேசம், இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 8-ஆம் தேதி, மோசமான வானிலை ம…

மியான்மாரில் நிலவும் கடுமையான ராணுவ அடக்குமுறை மற்றும் இனப்படுகொலை அச்சுறுத்தல்களால், அங்கிருந்து தப்பித்து வரும் ரோஹிங்கியா அகதிகள், பாதுகாப்பற்ற படகுகள் மூலம் வங்கதேசம், இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 8-ஆம் தேதி, மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்தால், சுமார் 250 மற்றும் 280 பேருடன் சென்ற இரண்டு படகுகள் வங்கக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இந்தப் பரிதாபகரமான விபத்தில், 500-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரைக் காக்கப் போராடும் அகதிகளின் இந்தத் தொடர் மரணங்கள், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.