இன்றைய அவசர உலகத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாகப் பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை 'தொப்பை'. உடலின் அழகைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இதுவே வழிவகுக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில்…

இன்றைய அவசர உலகத்தில், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாகப் பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை 'தொப்பை'. உடலின் அழகைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இதுவே வழிவகுக்கிறது.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.கட்டாயம் செய்ய வேண்டிய விடயங்கள்

இரவில் தூங்குவதற்கு முன்பு தேவையான அளவு சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து விட்டு, காலை எழுந்ததும் அந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து பிறகு வெதுவெதுப்பான சூட்டில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பெல்லாம் கரைந்து தொப்பை குறையும்.

நமது அன்றாட உணவு பழக்கவழக்கங்களை மற்ற வேண்டும்.

கீரைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத் தானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இனிப்புகள், இனிப்புகள், கார்பனேட்டட் குளிர்பானங்கள் மற்றும் மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்து வந்தால் தொப்பை வேகமாகக் குறையும்.

புரதச்சத்து மிகவும் அவசியம், முட்டை, முளைகட்டிய பயறுகள் மற்றும் பருப்பு வகைகளைச் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியை தூண்டாமல் பசியைக் கட்டுப்படுத்தும்.

தினமும் அதிகாலையில் உடலுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். காலையிலோ அல்லது மாலையிலோ குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி பண்ண வேண்டும். இது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வயிற்றுக்கான பயிற்சிகள் மிக மிக அவசியம் அப்போதான் தொப்பை குறையும். பிளாங்க், க்ரஞ்சஸ் மற்றும் யோகாசனங்கள் செய்வது வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை இறுக்கமாக்க உதவுகிறது.

தூக்கம் தான் அனைத்திற்குமே அடிப்படை தற்போதைய காலகட்டத்தில் பலர் சரியாகவே தூங்குவதில்லை. தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். முக்கியமாக குறைவான தூக்கம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

மனஅழுத்தம் ஸ்ட்ரெஸ் நம்மில் பலருக்கு தேவையானது போல் அனைவருமே சுமக்கும் ஒன்றாகும். மன அழுத்தம் அதிகரிக்கும் போது 'கார்டிசோல்' ஹார்மோன் சுரந்து, அது வயிற்றுப் பகுதியில் கொழுப்பாகப் படியும். எனவே தியானம் மூலம் மனதை அமைதியாக வையுங்கள்.