கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கவலைக்கு உரிய தீர்வு அவசியம் என இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார். இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று,…
கன்னியா வெந்நீர் ஊற்று விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கவலைக்கு உரிய தீர்வு அவசியம் என இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினர் குமார் ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார். இன்று (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.திருகோணமலை மாவட்டத்தில் வரலாற்று, மத மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்கள் மத்தியில் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.முக்கிய மரபுரிமைச் சின்னம்இது தொடர்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுள் கால உறுப்பினரான குமார் ஜெயக்குமாரனின் அறிக்கையில் மேலும், கன்னியா என்பது ஒரு மதத் தலம் மட்டுமல்ல; அது திருகோணமலையின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தமிழ் மக்களின் அடையாளத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒரு முக்கிய மரபுரிமைச் சின்னமாகும்.இதுபோன்ற வரலாற்று மற்றும் மத உணர்வுகள் சம்பந்தப்பட்ட இடங்களில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து, சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு சமூக அமைப்புகளும் பொதுமக்களும் முன்வைக்கும் கவலைகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைத்து இனங்களும் மதங்களும் பரஸ்பர மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் சூழலைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும், கன்னியா வெந்நீர் ஊற்று தொடர்பான வரலாற்று மற்றும் தொல்லியல் உண்மைகள் குறித்து வெளிப்படையான விளக்கத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும், எந்தவொரு அபிவிருத்தி அல்லது கட்டுமான நடவடிக்கைகளும் சட்ட நடைமுறைகள், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அனைத்து சமூகங்களின் மத, பண்பாட்டு உணர்வுகளை மதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இது யாழ்ப்பாணத்தில் கட்டி முடிக்கப்பட்ட கோயிலைப் போன்றது அல்ல. இப்போது அவர்கள் அதைக் கட்டப் போகிறார்கள். எனவே, அரசியல் பிரமுகர்கள் யாரும் ஏன் இதைப் பற்றிப் பேசவில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.

