கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கப்பொருட்களுடன் ஒருவர் இன்று காலை (9) கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக அனுமதியின்றி தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வந்து, சுங்கத்துறையிடம் அறிவிக்காமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்செல்ல முற்பட்ட போது கைது…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்கப்பொருட்களுடன் ஒருவர் இன்று காலை (9) கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக அனுமதியின்றி தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வந்து, சுங்கத்துறையிடம் அறிவிக்காமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.தங்கப்பொருட்கள் பறிமுதல்

நேற்று காலை 06.30 மணிக்கு துபாயிலிருந்து புறப்பட்டு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது தனது பயணப்பையில் 271 கிராம் மற்றும் 480 மில்லிகிராம் எடையுள்ள 12 தங்கக்கட்டிகள், 10 கைக்காப்புகள் மற்றும் 02 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்திருந்த போது பிடிப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளையை சேர்ந்த 53 வயதுடைய தொழிலதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேலதிக விசாரணைக்காக தங்கப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பயணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.