மொனராகலை, மாகந்தனமுல்ல வீதியின் லிதேகடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று(14.07.2026) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் மொனராகல…
மொனராகலை, மாகந்தனமுல்ல வீதியின் லிதேகடை சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று(14.07.2026) இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் மொனராகலை நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்றும், அதற்கு எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் லிதேகடை சந்திப் பகுதியில் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 52 வயதுடைய நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், மீட்கப்பட்டு சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பாகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

