இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜாப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் இலங்கை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சூதாட்டம் மற்றும் போட்டி நிர்ணயம் தொடர்பான…
இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஜாப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் இலங்கை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூதாட்டம் மற்றும் போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2026ஆம் ஆண்டுக்கான இலங்கை பிரீமியர் லீக் தொடரின் உத்தியோகபூர்வ தொடக்க விழாவுக்கு முன்னதாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டுத் துறையில் இடம்பெறுவதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையின் விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், போட்டி நிர்ணயம், ஸ்பாட்-ஃபிக்ஸிங் மற்றும் விளையாட்டில் முறைகேடுகளில் ஈடுபடுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

