இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றபோது அவரின் மாணவிகள் அவருக்கு நடாத்திய இறுதி மரியாதையான நாட்டியாஞ்சலி அனைவரது கண்களையும் குளமாக்கியுள்ளது. மட்டக்களப்பில் பரதகலாலயா என்னும் நாட்டியபள்ளியை நடாத்திவரும் ஓ…
இலங்கையின் புகழ்பெற்ற நடன ஆசிரியரான கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெற்றபோது அவரின் மாணவிகள் அவருக்கு நடாத்திய இறுதி மரியாதையான நாட்டியாஞ்சலி அனைவரது கண்களையும் குளமாக்கியுள்ளது.
மட்டக்களப்பில் பரதகலாலயா என்னும் நாட்டியபள்ளியை நடாத்திவரும் ஓய்வுபெற்ற ஆசிரியையான கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரன் இலங்கை உட்பட சர்வதேசத்தின் பல பகுதிகளிலும் பரதகலாலயா நாட்டியப ள்ளியை நிறுவி பெருமளவு நாட்டிய மாணவர்களை உருவாக்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவு நாட்டிய மாணவிகளையும் ஆசிரியர்களையும் உருவாக்கிய கலாபூசணம் சுபித்ரா கிருபாகரன் நேற்று முன்தினம் சுகவீனம் காரணமாக காலமானார்.
நேற்று மாலை அவரது இறுதி நல்லடக்கம் நடைபெற்ற நிலையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வின்போது அவரது மாணவிகள் கண்ணீருடன் வழங்கிய நாட்டிய சமர்ப்பணம் அனைவரது கண்களிருலும் நீர்வரும் நிலையினை ஏற்படுத்தியிருந்தது.
இன்றைய இறுதிச்சடங்கில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

