உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கலாச்சாரங்கள் நிலவுகின்றன. நாம் வாழும் வாழ்க்கையைத் தாண்டி, உலகின் சில பகுதிகளில் நிலவும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் நம்மை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. அத்தகைய சில சுவாரசியமான சடங்குகளைப் பார்ப்போம். ஆப்பிரிக்காவின் முதலிரவு…

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான கலாச்சாரங்கள் நிலவுகின்றன. நாம் வாழும் வாழ்க்கையைத் தாண்டி, உலகின் சில பகுதிகளில் நிலவும் விசித்திரமான பழக்கவழக்கங்கள் நம்மை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. அத்தகைய சில சுவாரசியமான சடங்குகளைப் பார்ப்போம்.

ஆப்பிரிக்காவின் முதலிரவு சடங்கு: ஆப்பிரிக்காவில் ஒரு பழங்குடி கிராமத்தில், திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குச் செல்லும் மணமக்களுடன், மணமகளின் தாயாரும் படுக்கையறைக்குள் செல்வது அங்குள்ள வழக்கமாகும். பொதுவாகத் தம்பதிகளைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லாத முதலிரவு அறைக்குள், தாய் நுழைவது ஒரு முக்கியச் சடங்காகக் கருதப்படுகிறது. மணமகள் தயங்கினால் அவரைத் தேற்றுவதற்கும், தாம்பத்தியம் குறித்த புரிதலைக் கற்றுக்கொடுப்பதற்கும், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் தொடங்குகிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கும் தாய் அல்லது அந்த குடும்பத்தின் மூத்த பெண்மணி இவ்வாறு செயல்படுகின்றனர்.

நமீபியாவின் "மனைவி பகிர்தல்": நமீபியாவின் "ஹிம்பா" (Himba) பழங்குடியின மக்களிடம் "ஒகுஜெபிசா ஒமுகாசெண்டு" (Okujepisa omukazendu) என்ற விசித்திர பழக்கம் உள்ளது. இதற்கு "மனைவியைப் பகிர்தல்" என்று பொருள். தங்களது பகுதிக்கு வரும் விருந்தினர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளுக்கு, கணவன்மார்கள் தங்கள் மனைவிகளைத் தற்காலிகமாகப் பகிர்ந்தளிப்பது அங்குள்ள சமூக வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து ஹிம்பா மக்களும் இதைப் பின்பற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவின் "ஒப்பந்த திருமணம்": இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் உள்ள "புன்காக்" (Puncak) மலைப்பிரதேசத்தில், பாரம்பரிய சடங்குகளை விட சுற்றுலாத் தொழிலுடன் தொடர்புடைய "ஒப்பந்த திருமணங்கள்" (Contract Marriages) பிரபலம். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை உள்ளூர் பெண்கள் தற்காலிகமாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த ஆண் ஊரை விட்டுச் செல்லும் போது, பெண்ணுக்குப் பணம் கொடுத்துவிட்டுப் பிரிந்துவிடுவார். பின்னர் வேறு ஒரு நபர் வரும்போது மீண்டும் இதேபோல் ஒப்பந்த திருமணம் நடைபெறுகிறது.

இந்தியாவின் "கோத்துல்" கலாச்சாரம்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் வாழும் "முரியா" (Muria) பழங்குடியினரிடையே "கோத்துல்" (Ghotul) என்ற சமூக அமைப்பு உள்ளது. இங்கு பருவ வயதை எட்டும் சிறுவர் (செலிக்) மற்றும் சிறுமிகள் (மோடியாரி) ஒன்றாகத் தங்குவதற்காகக் கிராமத்தின் நடுவே தனி மண் குடில்கள் அமைக்கப்படுகின்றன. இந்த குடில்களுக்குள் இளைஞர்களுக்குப் பாலியல் புரிதல் மற்றும் துணையைத் தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது. ஒருவரைப் பிடிக்காவிட்டால் மற்றவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதேநேரம், காதலில் பொறாமை ஏற்படக்கூடாது என்பதற்காக, ஒரே நபருடன் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக்கூடாது என்ற விசித்திரமான கட்டுப்பாடும் சில இடங்களில் நடைமுறையில் உள்ளது.

காலப்போக்கில் மேற்கண்ட பல சடங்குகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது இவை ஒரு சில குறிப்பிட்ட சமூகங்களின் அடையாளங்களாக மட்டுமே தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.