மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் கைது வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மண்ணெண்ணையில் ஓடிய இரண்டு டிப்ப…

மண்ணென்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் கைது

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மண்ணெண்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுகத் பண்டார தலைமையில் இன்று புதன்கிழமை காலை பல்வேறு இடங்களில விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் மணல் ஏற்றுவதற்கு வருகை தந்த 19 டிப்பர் வாகனங்கள் பொலிஸாரினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது மண்ணெண்ணையில் ஓடிய இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.