அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.தற்காலிகப்…

அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் சூழ்ந்துள்ளது.தற்காலிகப் போர்நிறுத்தம்

வடக்கு பகுதிகள் வரை தாக்குதல்களை நடத்தியதுடன், இஸ்லாமிய குடியரசான ஈரான் மீதான கடற்படை முற்றுகையை மீற முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட கப்பல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு பதிலடியாக, இப்பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதுமேலும் தனது தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

கடந்த மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் முறிந்துவிட்ட நிலையில்ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக அமெரிக்காவும் ஈரானும் மோதி வருவதால், இப்பகுதி கடந்த சில நாட்களாக இரு தரப்பு தாக்குதல்களையும் சந்தித்து வருகிறது.அமெரிக்க தாக்குதல்களில் 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிவப்புக் கோடு

சமீபத்திய வன்முறை சுழற்சியில் முதன்முறையாக, ஈரானின் தலைநகரான தெஹ்ரானை சுற்றியுள்ள பகுதிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கியபோது, ​​தெஹ்ரான் கப்பல் போக்குவரத்திற்கு அந்த நீரிணையை மூடியது.

இந்த நடவடிக்கை கச்சா எண்ணெய் விலையை வெகுவாக உயர்த்தியதுடன், பேச்சுவார்த்தைகளில் ஈரானுக்கு முக்கிய செல்வாக்கையும் அளித்தது.

ஈரானிய ராணுவத்தின் 'கதம் அல்-அன்பியா' மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்ஃபகாரி ஒரு எச்சரிக்கையை விடுத்தார்.

ஈரானின் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்கக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் விடுத்து வரும் எச்சரிக்கைகளை அமெரிக்கா செயல்படுத்தினால், இப்பகுதியில் உள்ள "அனைத்து உள்கட்டமைப்புகள்" மீதும் ஈரான் பரவலான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"எந்த சூழ்நிலையிலும், எந்த வகையிலும், ஒரு வெளிநாட்டு மற்றும் இப்பகுதிக்கு அப்பாற்பட்ட நாடான அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணையில் தலையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது ஈரானின் அசைக்க முடியாத சிவப்புக் கோடு (red line) ஆகும்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.