கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையின் (Facebook livestream) போது தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் கரந்தெனியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவர் தினேஷ் விஜேவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்…
கரந்தெனிய, தல்காவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர், தனது முகநூல் நேரலையின் (Facebook livestream) போது தன்னுயிரை மாய்த்துக் செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் கரந்தெனியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தினேஷ் விஜேவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அண்மையில் பல ஆண்டுகள் தென் கொரியாவில் பணிபுரிந்துவிட்டு இலங்கை திரும்பியிருந்தார்.
பொலிஸாரின் தகவல்படி, இச்சம்பவம் ஜூலை 12 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. அந்த நபர் முகநூல் நேரலையில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த போதே, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவசர கால அழைப்பு இலக்கமான ‘119’ இற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே தாங்கள் விசாரணைகளை ஆரம்பித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

