நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்தக் கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. கடந்த 7ஆம் திகதி நாமல் ராஜபக்சவினால் அனுப்பப்பட்ட அ…
நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, எதிர்க்கட்சியின் அனைத்துக் குழுக்களும் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியிருந்த போதிலும், அந்தக் கடிதத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 7ஆம் திகதி நாமல் ராஜபக்சவினால் அனுப்பப்பட்ட அக்கடிதத்தில், “உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலத்தை தன்னிச்சையான முறையில் நீடிக்க முயற்சிப்பதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பதற்கு எதிராக, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம்” குறித்து சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஏன் பதிலளிக்கவில்லைஇதற்கு உடனடியாக தலையிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அந்த கடிதத்தின் தலைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, நாடாளுமன்றத்தில் கூட இது குறித்து எந்தவொரு வலியுறுத்தலும் செய்யப்படவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாமல் ராஜபக்ச இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு நேரடியாகக் கடிதம் அனுப்புவதற்கு முன்னர், சிதறிப்போயுள்ள எதிர்க்கட்சியின் பல குழுக்கள் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி கூட்டணி அமைக்க முயற்சித்தன. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையிலேயே, தலைமைத்துவ மட்டத்தில் நாமல் ராஜபக்சவினால் இவ்வாறானதொரு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தியோகபூர்வ கடிதத்திற்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருப்பது, சஜித் பிரேமதாசவினால் நாமல் ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட ஒரு ஏளனமான செயல் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த அரசாங்கக் காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள பின்னணியிலேயே நாமல் ராஜபக்ச, சஜித் பிரேமதாசவுக்கு இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.

