நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 74,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நோய…
நாட்டில் டெங்கு நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 74,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, நோயாளர்களின் எண்ணிக்கை 74,000-ஐத் தாண்டியிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தொடர்ச்சியாகக் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

