நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இவற்றுட…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் 1,000-க்கும் மேற்பட்ட தடிகளும் கம்புகளும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகளும் 21 கைதிகளும் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.முதற்கட்ட விசாரணைகளின்படி, கலவரத்தின் போது சிறைச்சாலையின் சமையலறைக்குள் நுழைந்த கைதிகள், அங்கிருந்த கூர்மையான ஆயுதங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

மேலும், சமையலறையிலிருந்த தேங்காய்களை எடுத்து அதிகாரிகள் மீது வீசித் தாக்கியுள்ளமையும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.