நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் டி.டபிள்யூ. புஷ்பகுமாரவின் உடலுக்கு நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்கார இறுதி அஞ்சலி செலுத்தினார். இன்று (09) வியாழக்கிழமை ரம்புக்கனை, கிரிவந்தெனிய வெலிகந்த பகுதியில் உள்ள குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரின் இ…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் டி.டபிள்யூ. புஷ்பகுமாரவின் உடலுக்கு நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்கார இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இன்று (09) வியாழக்கிழமை ரம்புக்கனை, கிரிவந்தெனிய வெலிகந்த பகுதியில் உள்ள குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரின் இல்லத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.அத்துடன்  உடயிரிழந்த  சிறை உத்தியோகஸ்தரின் குடுமத்திருக்கும்  நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்கார  ஆறுதல் கூறினார்.

இதன்போது நீதி அமைச்சருடன் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நீதியமைச்சர் ஹர்ஷ நாணயக்கார, கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரம்புக்கனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சமந்த ரணசிங்க, ரம்புக்கனை பிரதேச சபை உறுப்பினர் பிரியந்த எதிரிசூரிய மற்றும் கேகாலை பிரதேச சபை உறுப்பினர் தரங்க பிரேமரத்ன ஆகியோரும் சென்றிருந்தனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 8 அதிகாரிகள் உட்பட 29 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.