நீர்கொழும்பு சிறையில் இரண்டு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கழிவறைத் தொட்டிகளின் உடைந்த பாகங்கள் மற்றும் சமையலறையில் இருந்த தேங்காய்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட கைத…

நீர்கொழும்பு சிறையில் இரண்டு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறை மோதலின் போது, கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கழிவறைத் தொட்டிகளின் உடைந்த பாகங்கள் மற்றும் சமையலறையில் இருந்த தேங்காய்கள் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள், தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டதுடன், மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற சிறை அதிகாரிகளையும் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கொடூரமான தாக்குதல் மேலும், சிறை சமையலறையில் இருந்த கத்திகள், மருத்துவப் பிரிவில் இருந்த கத்தரிக்கோல்கள் மற்றும் உடற்பயிற்சி மையத்தில் இருந்த பல்வேறு இரும்புக் கருவிகளும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏழாவது நாளில் கைதிகளின் நிலைமையைப் பார்வையிடச் சென்ற சிறை அதிகாரிகள் மீது இந்த ஆயுதங்களைக் கொண்டு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்திய கைதிகள், சிறை அதிகாரிகளின் தலைகளை குறிவைத்து தாக்கியதாகவும், அவர்களைக் கொல்வதே முதன்மை நோக்கமாக இருந்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவத்திற்குப் பிறகு, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இரகசியக் பொலிஸ் பிரிவினர் சிறைக்குள் சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனர்.மேலதிக விசாரணை இந்தச் சோதனைகளில், தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடிகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், தேங்காய்கள், கத்திகள், கத்தரிக்கோல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களாக சமர்ப்பிக்கப்படுவதற்காக பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைக்குள் வெடித்த இந்த தொடர் வன்முறைச் சம்பவங்களில், ஒரு சிறை அதிகாரி மற்றும் எட்டு பொலிஸார் உட்பட மொத்தம் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல்களில், சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட 100ற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளமையும் இது தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.